www.sltjweb.com
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை சார்பாக கடந்த 03-02-2013 அன்று ‘கொள்கை எழுச்சி மாநாடு’ அறிமுகம் மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
IMG_0157சிலாபம், ஈச்சம்பிட்டிய மைதானத்தில் ஜமாத்தின் துணைத் தலைவர் சகோதரர் பர்சான் தலைமையில் பகல் 2.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது. சகோதரர் பர்சான் அவர்களின் அறிமுக உரையை தொடர்ந்து ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோதரர் அஜ்மீர் அமீனி அவர்கள் “இது தான் தவ்ஹீத்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதையடுத்து ஜமாஅத்தில் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் “-ஏப்ரல் 20- கொள்கை  எழுச்சி மாநாடு ஏன்?” எனும் தலைப்பில் தெளிவுரை வழங்கினார்கள். இப்பொதுக் கூட்டம் மாலை 6.00 மணியளவில் முடிவுற்றது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
IMG_0117 IMG_0125 IMG_0127 IMG_0129

Popular Posts