ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 20.01.2013 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சின்னப்பள்ளிக்கு அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் கபீர் DISc அவர்கள் ‘தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன?’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். கொட்டும் மழையிலும் பல சகோதர சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!