குருநாகல் தல்கஸ்பிடியில் துாய ஏகத்துவ எழுச்சி
www.sltjweb.com
கடந்த 17 -02-2013 அன்று குருநாகல் மாவட்டம் தல்கஸ்பிடியில் சகோதரர் முபாரக் அவர்களின் வீட்டில் துாய ஏகத்துவ பயான் மற்றும் ஜமாஅத் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளா் அப்துர் ராஸிக் அவர்கள் ஜமாஅத்தின் தனித்துவப் பண்புகள், குராபிகளுடன் கள்ளக் கூட்டு வைப்போருடன் ஜமாஅத் கைகோர்க்காது தனித்து செயற்படுவதற்கான காரண காரியங்களை விரிவாக விளக்கினார்.அத்தோடு, மற்ற ஜமாஅத்களின் போலித் தன்மைகளையும் போலித் தவ்ஹீத்வாதிகளின் சந்தர்ப்பவாதங்களையும் தோலுரித்துக் காட்டினார்.
அடுத்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்களும் அப்துர் ராஸிக் அவர்களும் தெளிவாக ஆதாரங்களைக்காட்டி பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் திருப்தியோடு சென்றனர். மங்ரிபின் பின்னர் ஆரம்பமான நிகழ்ச்சி இரவு 11 மணிவரை தொடர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ்!